Search This Blog

Sunday, November 21, 2010

The Maiden Post

ஏதோதோ நினைவுகளில் மூழ்கி இருக்கும் பொழுது அவற்றை எல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுவது இயல்பானதுதான். என் எழுத்துக்கள் எத்தனை பேரை கோபப்படுத்தும் என்று தெரியவில்லை. ஆனால் எதோ ஒரு மூலையில் என்னைப்  போல சிந்திக்கும் ஒரு ஆள் கூடவா இல்லாமல் போய்விடுவார்? இல்லாவிட்டால் என்ன புதியதாக ஒரு தகவல் கிடைத்ததே என்று என்னை மன்னிக்காமலா போய்விடுவீர்கள்? தமிழ் சினிமாவை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆர்வம். காரணம் தமிழ் சினிமா என்னை கவர்ந்தது ஏறக்குறைய ஒரு கடந்த காலமாகவே ஆகி விட்டது. எனக்கு மட்டுமல்லாது இன்னும் பல பேருக்கு இப்படித்தான் இருக்கும் என தோன்றுகிறது. உடனே இதோ இன்னொரு பழமைவாதி கம்பியுடருக்குள் புகுந்துகொண்டான் பார் என்று குரல் எழுப்ப வேண்டாம். தமிழ் சினிமா என்றில்லை தமிழ் சினிமா இசை கூட அதன் அழகை துறந்துவிட்டாதாகவே எண்ண தோன்றுகிறது. எம் எஸ் வி இசை போல் ஒரு சங்கீத வெள்ளம் அடியோடு நின்று போய்விட்டது. இளையாராஜாவின் காலம் கடந்த பாடல்கள் கடந்து போய் விட்டன. ஏன் ரகுமான் பாடல்கள் கூட முனுமுனுக்கும் தகுதியை இழந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டன. இளைய தலைமுறை விரும்பும் பெரும்பாலான பாடல்கள் பொதுவாகவே ஒரே மாதிரி அதாவது கழிப்பறைக்குள் உட்காந்துகொண்டு முக்கி முனங்கி பேசுவது போல ஒலிக்கின்றன. இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து இதே கழிப்பறை கானங்கள் ஒரு கிளாசிக் ரேஞ்சுக்கு வந்துவிடும் என்பதுதான் தவிர்க்க முடியாத பயங்கரம். என்னை பொறுத்த வரை காலங்கள் எவ்வளவு ஆனாலும் சில பாடல்கள் மட்டுமே கிளாசிக் என்கிற கட்டத்தை எட்டுகின்றன. கீழ்க்கண்டவற்றில் எல்லாமே கிளாசிக் வகைதான்           'யார் அந்த நிலவு?', மன்னவனே அழலாமா?, கண்ணன் என்னும் மன்னன்  பேரை சொல்லச்சொல்ல, அனுபவம் புதுமை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், பட்டியலுக்கு முடிவு வரும் முன் தூக்கம் உத்திரவாதம். இதுவரை படித்த கண்களுக்கும் கோபம் வராத உள்ளங்களுக்கும் ஒரு இனிய இடைவேளை.

No comments:

Post a Comment